கதை என்னதான் 90s காலகட்டத்தில இருந்தாலும் நான் ஸ்கூலுக்கு போன 2010 வரைக்கும் இப்படிதான் எங்க ஊர்லயும் இருந்தது. காலங்கள் நகர நகர இப்ப அந்த பெரிய தலைகட்டை எவனும் மதிக்கிற மாதிரி தெரியலை. இந்த கதையை என்னோட ஊரோட அழகா sync பண்ண முடிஞ்ச்சு. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் வடக்கு வீட்டு அகமது கண்ணு மாதிரி எல்லா ஊர்களிலும் எவனாவது ஒருத்தன் இருப்பான். அகமது கண்ணை பொலக்குறதுக்கினே மஹ்மூது மாதிரியும் எவனாவது ஒருத்தான் இருப்பான்.
இப்ப வரைக்குமே முஸ்லீம் சமூகம் பின்தங்கியிருப்பது ரொம்ப கவலைக்கிடமாக இருக்கு. ஆனா அவங்களை அப்படியே வச்சுருக்கிற அதிகாரத்தையும் அரசாங்கத்தையும் நினைக்குறப்ப பத்திகிட்டுத்தான் வருது.
பரீதும் ஆயிஷாவும் ஒன்னு சேர்ந்திருந்தாங்கனா என்னோட மனது நிறைவடைந்திருக்கும்.
Sorry.....Spoiler......
என்னை கவர்ந்த மனமென்னும் அலமாரியில் இப்போது தோப்பில் முகம்மது மீரானும் ஒருவர்...
நுஹ்மான் சொல்றமாதிரி இவரோட புத்தங்கள் பெரிய அளவு பப்ளிசிட்டி அடையலை. அதுவும் கொஞ்சம் வருத்தத்தான்.
நூல் : ஏழு தலைமுறைகள் ஆசிரியர் : அலெக்ஸ் ஹேலி ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல புத்தகத்தை படிச்ச முடிச்ச திருப்தி கிடைச்சது. உண்மையிலே அடிமைகளோட வாழ்வு எவ்வளவு கொடுரமா இருந்ததுனு ( இருக்குதுனு ) இதை விட வேறு எதுவும் சொல்ல முடியாது. டொரண்டினோ படங்கள் மற்றும் வேறு சில படங்கள்கூட இந்த அளவுக்கு காட்டுனது கிடையாது. அந்த அளவுக்கு ஆசிரியர் தன்னோட 12 வருச உழைப்பை இதில் காட்டியிருக்கிறார் மற்றும் அவரோட வம்சாவளியை கண்டு பிடிச்சுருக்கிறார். ஆரம்பத்தில கிண்டே மாட்டுவான்னு நான் நெனைக்களை ஆனா எதார்த்தத்தில் அதுதான் உண்மைனு பின்னார்தான் புரிந்தது. இதுல வெறுக்குற மாதிரியான விஷயம் என்னான கடல் பயணம்தான் ஆனா that part is inevitable. பின்ன அவனுக்கும் பெல்லுக்கும் நடக்குற காதல் சமாச்சாரங்கள் ( ஒருதலை பின்னர் இருதலை ) அதுக்கப்புறம் கல்யாணம் எல்லாம் சிறப்பா அமையுறது. கிஜ்ஜி பிறப்பு .... அப்பிடியே அடுத்த கட்டத்துக்கு நகர்றதுனு ரொம்பவே ஆர்வமா இருந்தது படிக்கும்போது. இதை படிச்சதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது வெள்ளைகாரங்க ஏன் கருப்பினத்தவங்களை வெறுக்குறாங்னு. #blackliv...
Comments
Post a Comment