Skip to main content

Posts

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

கன்னிகா - ரகுநாதன் | Kannika - Raghunathan | தமிழ் புத்தக விமர்சனம் - Tamil Books Review

                                                             நூல் : கன்னிகா                                                      ஆசிரியர் : ரகுநாதன்                                                     பொதுவா பெண்களோட வயதிற்கேற்ப அவங்களை பிரிச்சுருப்பாங்க உ.தா மங்கை , பெதும்பை , அரிவை இது அஞ்சு வயசுலிருந்து முப்பதைந்து வயசு வரைக்கும் இருக்கும் . இந்த ஒவ்வொரு கால கட்டத்திலயும் அவங்களோட உணர்ச்சிகள் ஆவல்கள் எப்படி இருக்கும் என்பதை ஆசிரியர் விளக்குகிறார். ஒவ்வொரு பருவத்திலும் பசங்களுக்கு ஏற்படக்கூடிய அதே எண்ணம்தான்( மனது அலை பாய்தல் ) பெண்களுக்கும் ஏற்படும்னு கமலாவோட ...

பால் அரசியல் - நக்கீரன் | Politics In Milk - Nakkeeran | தமிழ் புத்தக விமர்சனம் - Tamil Books Review

நூல் : பால் அரசியல் ஆசிரியர் : நக்கீரன்                                           நா இந்த புத்தகத்தை வாங்குனதுக்கு முக்கியமான காரணம் என் னா ன்னா நான் பால் குடிக்க மாட்டேன்  அதனால மத்தவங்கள கடுப்பேத்துறதுக்கு என்னென கதை சொல்லலாம்னு முடிவு பண்ணேன் அதுக்குத்தான் இத வாங்குனேன் ஆனா இதுல சொல்ற பாத்தா இனிமேல் டி கடை பக்கம் கூட போக கூடாதுன்னு தெரியுது. இதுல (நல்ல ) பாலோட கெட்ட விஷயங்களை சொல்லல . ஆனா நல்ல பால்னு நினைச்சுட்டு தினமும் பத்து பதினச்சு டி குடிக்கிறதா பெருமையா ஸ்டேட்டஸ் போடுது நம்ம சமூகம்(ஏலே இனி கூடிய சீக்கிரம் எல்லோரும் சாவதாண்டே போறீங்க ).ஒரு சின்ன விஷயத்துல ஆரம்பிக்குற  நோய்  எல்லாம் ரொம்ப பெருசா வளருகிறதுக்கு ஒரு  எடுத்துக்காட்டுதான் இது. ஏ1,ஏ2,மாட்டுப்பால், தாய்ப்பால் இது எல்லாதுக்கும்மான வித்தியாசத்தை தெளிவா விளக்கியிருப்பார். இதுல எது ஆகச்சிறந்ததுனு கேட்டா தாய்ப்பால் மட்டுந்தான். ஆகையால் பிறந்த குழந்தைகளுக்கு முதல்ல தாய்ப்...

கழிவறை இருக்கை - லதா | The Toilet Seat - Latha

                                               நூல் : கழிவறை இருக்கை                                                       ஆசிரியர் : லதா ஆணின் ஆதிக்க சமூகத்தில எல்லாம் அவங்க விருப்பபடி இருக்குறப்ப செக்ஸ் விஷயத்தில் கூட அவங்க டாமினேட் பண்றது ரொம்ப ஓவர்னு ஆசிரியர் எடுத்துரைக்கிறார். உண்மையும் அதுதான். பெண்ணுக்கு கிளிடோரியஸ் என்ற பாகம் இருக்கிறதையே அந்த பாவிக நினைக்க மாட்டிகிறாங்க. ஏதோ அவங்களுக்கு மட்டும்தான் feelings , moods , ejaculation இருக்கிறதா நினைப்பு . அப்ப பெண்களுக்கு உச்சகட்ட நிலை வராது அவிங்களா நினைச்சுட்டு முடிஞ்ச உடனே bye சொல்லிட்டு அவங்க வேலைய பாக்க போறது இன்னும் சிலர் லைட்டா ரெண்டு மூணு டைம் vagina ல கைய வைச்சு தேச்சுட்டு அந்த பெண் கொஞ்சம் முனகினா கூட ஓகே இவளும் உச்சகட்டத்தை அடைஞ்சுட்டதா நினைச்சு போய்றது . இதுல...

மாதொருபாகன் ( Mathorupaagan ) - பெருமாள் முருகன் | one part women - perumal murugan

 நூல் : மாதொருபாகன் ஆசிரியர் : பெருமாள் முருகன் சாதியத்தன்மையை இப்படியும் எதிர்க்கலாம் என்பதற்கு இந்த நாவல் ஒரு உதாரணம். அதுமட்டுமின்றி இனம் இனம்னு பேசுறவங்கயதான் அதே இனத்தை சேர்ந்த  பொன்னாளையும் காளியையும் வசை பாடுறாங்க. அதெல்லாம் கூட பொருத்துகெல்லாம் ஆனா சம்பந்தமே இல்லாம எது எதுகெல்லாம் கனெக்ட் பண்றதுங்கிற விஷயம் தெரியாம கண்ட காரணத்தையும் சொல்றாங்க பாரு சகிக்க முடியல. நாவல்னா கற்பனையும் கலந்து இருக்கும்கிற அடிப்படை அறிவு(சுயபுத்தி) இல்லாவங்கதான் புத்தகத்தை எரிக்கிறது ஆசிரியரை மிரட்டுவது போன்ற கேவலமான செயல்ல ஈடுபடுறது அதுவும் அவனோட புத்தி சொல்லியிருந்த பரவாயில்லை அடுத்தவங்க சொல்றத கேட்டு அது என்னானே தெரியாமலே தெருவுல வந்து கோசம் போடுறது. பிள்ள இல்லாதவங்க அவங்க கஷ்டத்தை பாப்பாங்களா இல்ல பொருளாதார கஷ்டத்தை பாப்பாங்களா இல்ல இந்த கேள்வி கேக்குற பாடுகளுக்கு பதில் சொல்வாங்களா ....என்னத்தை சொல்ல ..😑😑😑 பிள்ளை இல்லாதவங்களோட கஷ்டத்தை விட அவங்களை மறுபடியும் அதே கேள்வியை கேட்டு அவங்களை மன சித்ரவதை செய்து பைத்தியமா ஆக்கி அலையவிட்டு வேடிக்கை பாக்குற அவிங்க  அதுக்கும்...

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - ஜான் பெர்கின்ஸ் - முருகவேள் | Confessions of an Economic Hit Man - Jhon Perkins - Murugavel

நூல் :  ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் ஆசிரியர் : ஜான் பெர்கின்ஸ் - முருகவேள் உலகத்தில இருக்குற ஒரு சில பண முதலைகளோட லாபங்களுக்காக மொத்த நாட்டையுமே பட்டினியா போடுறது , அவங்களோட வாழ்வாதாரத்தை அழிக்கிறது( ஏதாவது குறுக்கிட்டால் அவங்களையும் சேர்த்து அழிக்கிறது ) , அவங்க இருப்பிடத்தை காலி செய்யுறது இன்னும் பல கேவலமான , கொடிய செயல்களை செஞ்சு பணத்தை தன்னோட பாக்கெட்டுல போடுக்கிறதுல அப்படி என்னதான் இருக்கோ அந்த ஃபாடுகளுக்கு. அந்த ஃபாடுகளுக்கு இந்த ஆசிரியர் எப்பிடி எல்லாம் வேலை செஞ்சாரு என்னென்ன செஞ்சாரு யாருக்காக செஞ்சாரு இதப்பத்தி தெளிவா சொல்லியிருக்காரு ஜான் பெர்கின்ஸ். ஒரு நாடு இன்னொரு நாட்டுகிட்ட( அமெரிக்காகிட்ட ) கடன் வாங்குனதுக்கு அப்புறம் அந்த நாட்டை என்னவெல்லாம் பண்ணாலாம்ங்கிறதுக்கு இந்தோனேசியா, ஈரான் , பனாமா etc இந்த நாடுகள் ஒரு உதாரணம். நாட்டையே சுடுகாடா மாத்திடுவாங்க. மத்த நாட்டுக்கு நாட்டாமை பண்றதுக்குதான் ஐ.நா சபை , சார்க் இன்னும் நிறைய அமைப்பு இருக்கு பின்ன எதுக்கு இந்த அமெரிக்க தலையீடுதுனு உங்களுக்கு தோனுனா நீங்க ஒரு தீவிரவாதி , நாட்டுக்கு( அமெரிக்கா...

அயோத்திதாசர் - தருமராஜ் | Ayothee Thasar - Tharumaraj

நூல் : அயோத்திதாசர் ஆசிரியர் : தருமராஜ் ஒரு பதில் ஒருத்தரோட வாழ்க்கையே மாத்தும்னு யாரு நினைச்சுருப்பாங்க அது அவருக்கும் மட்டுமில்லாமல் அங்கிருந்த எல்லாரோட வாயையும் அடைக்க வைச்சு அவங்களை தீராத மன உலைச்சலுக்கு கொண்டு போயிருக்கும். அது அயோத்திதாசரோட பதில். சுதந்திரத்திற்கு முன்னால் இருந்த காலத்துல பார்ப்பானோட அதிகாரம் அதிகமா இருந்ததுனால அதை எதிர்க்கிறதுக்கு பெரியார் , திரு.வி.க இன்னும் பல போராடியிருக்காங்க இவங்க எல்லோருமே மக்களுக்கு தெரிஞ்சவங்க ஆனால் மக்களுக்கு தெரியமலே நிறைய பேரும் இருக்காங்க அதில இவரும் ஒருத்தர் ஆனா இவரோட பெயர் ஆட்சியில இருக்கிறவங்களுக்கு தெரியும். எல்லோரும் நேரே போய் எதிரிய தாக்குறாங்க ஆனா இவர் மட்டும் எதிரியோட கருத்துக்கும் அதை எதிர்கிறவங்களோட கருத்துக்கும் வேறு மாதிரியான ஒரு கருத்தை முன் வைக்கிறார் . அவர் வைக்கக்கூடிய கருத்து என்னான " எல்லோரும் பெளத்த மதத்தை சார்ந்தவர்கள் " நம்மளை சாதிவாரியா பிரிச்சது பிராமணம். இவர் முன்வைக்கும் கருத்து " தமிழில இருக்குற சம்பிரதாயங்கள் அனைத்துமே பெளத்தத்திலிருந்து வந்தது " அதுக்கு அவர் பல புனைவு கட்டுர...

வேள்பாரி - வெங்கடேசன் | Velpaari - Venkatesan

நூல் : வேள்பாரி ஆசிரியர் : வெங்கடேசன்  ஒரே ஒரு உண்மையை மட்டும் முக்கியமா வைத்து அதை சுற்றி நடக்குற எல்லாத்தையும் கற்பனையா எழுதியிருக்கிறார் ஆசிரியர். My favorite novel. 1. உண்மை : மூவேந்தர்களாலும் பாரியை தோற்கடிக்க முடியவில்லை. 2.கற்பனை : உண்மையைத் தவிர மற்ற அனைத்தும் கற்பனை. 3.போருக்கான காரணம் : பாரியின் புகழ் மூவேந்தருக்கு வெறுப்பூட்டியது மற்றும் பாரி தன் மகள்களை மூவேந்தருக்கு தர மறுத்தது. 4. பாரி சூழ்ச்சியால் கொல்லப்பட்டான். நம்ம ஞாபகத்தில நிக்கிற பேர்கள் சிலதான் என்றாலும் பல பேர்கள் வந்து போகிறார்கள். ஒவ்வொரு செடி , பூ , மரம் , ஆயுதம், மக்களோட பிரிவுகள், விலங்குகள் , காலங்கள் etc இது மாதிரி இன்னும் நிறைய விஷயங்களை நுணுக்கமா ஆராய்ந்து பல தகவல்களை தந்திறுக்கிறார்.அதுமட்டுமில்லாம கட்டிலுக்கு , குத்துவிளக்கு, சோமபானம் , தேவாங்கு etc  எப்படி இதுக்கலாம் இந்த பேர் வந்ததுனு ஒரு புனைவ சிறப்பா சொல்லியிருப்பார். Romance சொல்லும் படியா இல்லை ஆனா சண்டை எல்லாம் வேற லெவல் ஆ இருக்கும் 👌👌👌. இந்த தான் நல்லா இருக்கும் அந்த சண்டைதான் நல்லா இருக்கும்னு சொல்ல முடியாது எல்லாமே fan...

யவன ராணி - சாண்டில்யன் | Yavana Rani - Saandilyan

       நூல் : யவன ராணி       ஆசிரியர் : சாண்டில்யன்       நான் படிச்ச இரண்டாவது பெரிய நாவல். அதாவது முழுக்க முழுக்க கற்பனை கொஞ்சம் உண்மையை அடித்தளமாக அமைத்து இயற்றப்பட்டது. இதிலும் நான் ஏமாந்தேன் i miss queen. இதுல ஆசிரியர் கடைசியில இப்படி ஏமாத்துவாருனு நான் நினைக்கவே இல்லை. இதுக்குத்தான் நான் fantasy சம்பந்த புத்தகங்களே படிக்கிறதில்லை. வழக்கம்போல் எதுக்கும் ஆசை படாத , யாரையும் ஏமாத்தாத , உயர்ந்த பதவியில இருக்குற ஒரு உன்னத மனிதராக கதாநாயகன் உள்ளார் அவருக்கும் காதலிக்கும் ஒரு சின்ன breakup அதனால கடல்கரையில நடத்து போறப்ப ஏதையோ இடிச்சதுமாதிரி இருந்தது கீழ பாத்த....அப்ப ஆரம்பிச்சது சனியன். இது ஜென்ம சனினு ஹீரோ நினைச்சதுனால சீக்கிரமே( ஒரு வருடத்திற்குள் )முடிஞ்சது சுருக்கமா சொன்னா   7 1/2 சனி.  7 1/2 சனியா  இருந்ததுனால சீக்கிரமே ஜோலி முடிஞ்ச்சு ஆனா இதுக்கான காரணம் ஹீரோவோட காதலியான ஜென்ம சனிங்கிறது கடைசி வரைக்கும் ஹீரோ தெரியாமலே போய்விட்டார்.  இடையில் நிறைய தடவை ஹீரோவோட உயிருக்கு ஆபத்து வந்தபோதெல்லாம் ஹீரோ ...

தாவூத் இப்ராஹிம் - ஹீஸேன் ஸைதி - கார்த்திகா குமாரி | Dawood Ibrahim - Hussain Zaidi - karthika kumari

               நூல் : தாவூத் இப்ராஹிம்       ஆசிரியர் :  எஸ் . ஹீஸேன் ஸைதி            தமிழில் : கார்த்திகா குமாரி எல்லாருக்கும் சின்ன வயசுலே இருந்து ஒரு கனவு இருக்கும் எப்படியாச்சு ஒரு ரவுடி , தாதா , டான் ஆகனும்னு ஆனா நான் இப்ப இதை டைப் பண்ணிட்டே இருக்கும் போது என் மனசு என்கிட்ட பொய் சொன்னாலும் பொருந்துர மாதிரி சொல்றானு சொல்லுது. ஒருநாளாவது டான் வாழ்கை வாழனும்னு நினைச்சு பார்த்தவங்க நிறைய பேரு including me ஆனா அது............. இந்த புத்தகத்தை ஒரு நாவல் மாதிரி எழுதியிருந்தா நல்லாயிருந்துருக்கும் நான் எதிர் பார்த்ததும் அதுதான். எப்தாவூத் முதன் முதல்ல பண்ணுன கொலை கொள்ளைலாம் திரில்லாங்கா சொன்னா இன்னும் சிறப்பா இருக்கும். பரவாயில்லை ஆசிரியர் கட்டுரை மாதிரி எழுதினதே நல்லாதான் இருந்தது. ஒவ்வொரு ரவுடிக்கும் ஒரு சம்பவம் நடந்திருக்கும் அதுகப்புறம்தான் அந்த ரவுடியோட பேரு வெளிய தெரிய ஆரம்பிக்கும். இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னான அதுவரைக்கும் peakல இருந்த இன்னொரு ரவுடிக்கும் இந்த புது ரவுடிக்க...

ஆதி இந்தியர்கள் ( Aadhi Indiyarkal ) - டோனி ஜோசப் | Early Indians - Tony Joseph

                               நூல் : ஆதி இந்தியர்கள்                           ஆசிரியர் : டோனி ஜோசப்                           தமிழில் : PSV குமாரசாமி ஹாலிவுட் டைரக்டர் கிறிஸ்டோபர் நோலனோட படம் பாத்த effect இருந்துச்சு முழுக்க முழுக்க அறிவியல் சம்பந்தமாக ( டின்ஏ , ஜீன் , ஹாப்லோகுருப் , மரபியல் , ஹரப்பா , ஹோமோசேப்பியன்ஸ் etc ) இதுல எனக்கு தெளிவா புரிஞ்ச விஷயம்னா அது " அவா இந்தியாவை சேர்ந்தவ இல்லை ". இன்னொன்னு நாம எல்லோருமே வெளிய இருந்து இங்க வந்தவங்தான் யாரும் எதுவும் சொந்தமில்லை 😁😁😁. நாம மனசுல நினைச்ச பல கேள்விகளுக்கு ஆசிரியர் அறிவியல் பூர்வமா விடை கொடுத்திருக்கிறார். உதாரணமாக வேதங்கள் எப்ப எழுதபட்டிருக்கும் , யாரால் எழுதப்பட்டிருக்கும் , யாருக்காக எழுதப்பட்டிருக்கும் இன்னும் சில. அவாளோட பகல்கனவுல கல்லை இல்ல இல்ல பெரிய பாறையையே போட்டு அவாவோட மண்டைய சுக்கு நூறாக...

கச்சத்தீவு - ஆர்.முத்துக்குமார் | Kachchatheevu - R.Muthukumar

                  நூல் : கச்சத்தீவு                  ஆசிரியர் : ஆர்.முத்துக்குமார் ரொம்ப வருஷமா ஒரு சந்தேகம் இருந்துகிட்டே இருந்தது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் " கச்சத்தீவை மீட்போம்னு " சொல்றாங்களே அப்படினா என்ன ? அதுல என்னதான் இருக்கு ? எதுக்கு தமிழக மீனவனர்களை இலங்கை காரங்க அடிக்குறாங்க, கொல்றாங்க ? இது மாதிரி இன்னும் பல கேள்விகள் எல்லார்கிட்டயும் இருக்கும். அதை பத்தி தெரிஞ்சுபோமே அப்டிங்கிறதுக்காக இந்த புக் வாங்கினேன். கச்சத்தீவு :       கச்சத்தீவோட மொத்த சைஸ் 163 ஏக்கர் அப்படி பாத்த ஒரு சின்ன கிராமத்தோட சைஸ்தான் இருக்கும்.  இத்தனைக்கும் அங்க யாரும் வாழ்றதுக்கு தகுதியான இடம் கிடையாது.ஆனா  அங்க ஸ்பெஷல் ஆன மீன்கள் நிறையவே இருக்கும் அதனாலதான் போட்டி ஆரம்பமாச்சு . இதுல இன்னொரு விஷயம்னு பாத்த யாரவது இந்தியாவை போர் தொடுக்கனும்னு நினைச்ச கச்சத்தீவு வழியா வர்றது ஈசியா இருக்கும். அதுமட்டுமின்றி போர் ஆயுதங்கள் வைக்கிறதுக்கும் விமானம் தரையிறங்கவும் கப்பல் நிறுத்துறதுக்கு...

1984 சீக்கியர் கலவரம் - ஜெ.ராம்கி | 1984 Seekiyar Kalavaram - J.Ramki

                                  நூல் : 1984 சீக்கியர் கலவரம்               ஆசிரியர் : ஜெ.ராம்கி        " ஆளும் வர்த்தகம் நினைச்சா சிறுபான்மை இனத்தவங்களை என்ன வேணாலும் செய்யலாம் " அப்டீன்றதுக்கு 1984 ஒரு உதாரணம். தொடர்ந்து மூனு நாள் ஒரு இனத்தை குறி வைச்சு தாக்குறாங்க ஆனா போலீசும் அரசும் வழக்கம் போல கைகட்டி நின்னு வேடிக்கை பாக்குறாங்க.இதுதான் சார் நம்ம இந்தியா.( இந்தியர் என்பதில் பெருமை கொள்ளடா ) எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இப்ப வரைக்கும் மன்னராட்சி முறை நடைமுறையில இருக்குதான் நினைக்குறேன் உதாரணமாக காங்கிரஸ் கட்சி .இந்த கட்சியோட தலைவர் யாரை நீங்க எடுத்துகிட்டாலும் அவங்க ஒரே வம்சம்தான்னு சொல்லனும் . இவங்களோட ஆசியோட கைபொம்மையா இருந்த ஒரு சிலர்  வேணா ஆட்சி நடத்தியிருக்கலாம் ( ஆக தலைவரின் தூண்டுதலின் பேரில் ). கணக்க கூட்டி கழிச்சு  பாத்த விஷயம் நன்றாக புரியும் ( தெரியும் ). அதுஎன்னமோ தெரியல இன்னும் நாம அடிமையா இருக்கிறமோ அப்டீன்ற பீல்...

காடு - ஜெயமோகன் | Kaadu - Jeyamohan

நூல் : காடு நூலாசிரியர் : ஜெயமோகன் நான் இது வரைக்கும் அடர்ந்த காடு அமேசான் காடு சொல்லுவாங்கள அந்த மாதிரி காட்டுக்கு போனதே இல்லை அதனாலேயே இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிச்சேன். ஆரம்பிக்குறப்ப முன்னுரையே இருபது பக்கத்துக்கு இருந்துச்சு அதுக்கப்புறம் கதை தொடங்குச்சு ஒரு வயசான தாத்தாவிலிருந்து. நாவலோட கேரக்டர்கள் பத்து பேருக்கும் ( ரொம்ப நேரம் வரக் கூடியவங்க ) கம்மிதான். குறிப்பிட்டு சொல்லும் படியா இருக்கிறது ஹீரோ , குரிசு , ரெசாலம் , குட்டப்பன் , சினேகம்மை , அய்யர் , ஹீரோயின். ஹூரோயின் வர சீன் கூட குறைவுதான் அதே போல வர்ணணைகளும் ( காமத்தை தவிர்த்து ) ஆனா காட்டோட இயல்பு அதோட உக்கிரமான செயல்னு வர்ணணைகள் அதிகமா இருக்கு.  இதுல என் கனவுல அடிக்கடி வந்தது நீலி மட்டும்தான் ( இப்ப வரைக்கும் ). நீலியோட கதை ரொம்ப அற்புதமா இருந்துச்சு.ஆனா மலையாளத்தை ஏன் உள்ள இழுத்தார்னு கேட்ட எனக்கு தெரியல. கதையில ஒரு சில இடத்துல  லேக் இருக்கும் அதே மாதிரி கம்பன் வரிகள் இருக்கும் அதையெல்லாம் தவிர்த்தால் நல்லா இருந்துருக்கும். ஒரு சாதாரணமாக இருக்குற பையன் அல்லது வாலிபனோட காமத்தை விவரிச்சுருப்பார் ஆனா...

பெண்களின் அந்தரங்கம் - நப்பின்னை | pengalin antharangam - nappinnai

                         நூல் : பெண்களின் அந்தரங்கம்                          ஆசிரியர் : நப்பின்னை   நான் நினைச்சது வேற படிச்சு முடிச்சதக்கு அப்புறம் பீல் பண்ணது வேற. அதாவது நான் எப்படியாவது crushஓட மனச தெரிஞ்சுகிட்டு இந்த வருசம் கமிட் ஆயிலாம்னு நினைச்சு வாங்குனேன் ஆனால் இதுல கமிட் ஆனவங்களுக்கு மட்டும் தான் கன்டென்ட் இருக்கு.அதுவும் பொதுவான விஷயம் தான் . ( உதாரணமாக பெண் என்பவள் மென்மையானவள் அவளை பூ போல தாங்க வேண்டும் . இது மாதிரியான கருத்துகள்  இடையிடையே  சிறியதாக ஆண்களுக்கான இடைச்சொருகல் இருக்கும் ) இன்ன இன்னது நல்லா இருச்சுன்னு சொல்ற மாதிரி எதுவும் கிடையாது ஆ மறந்தே போய்டேன் ஒரு கன்வர்சேசன் இருக்கும் தயவு செஞ்சு அதை மட்டும் படிக்காதிங்க. படிச்சிங்கனா கன்பார்ம் நீங்க மென்டல் ஆயிருவிங்க. அதாவது அவங்க ஆமானு சொன்னா இல்லை அர்த்தமாம் இல்லைனு சொன்ன ஆமானு அர்த்தமாம் என்ன ஒரு பித்தலாட்டம் பாத்திங்களா மக்களே ( background bgm : vip dhanush ச...

காவல் கோட்டம் - வெங்கடேசன் | kaaval kottam - vengatesan

                  நூல் : காவல் கோட்டம்                ஆசிரியர் : வெங்கடேசன் இதோட முதல் பாகம் முழுக்க விஜயநகர பேரரசு , பட்டானி படைகள் , கும்பினி படையை பற்றியது . ஆனால் ஆரம்ப கட்டத்தில களவு  பற்றிய  தகவல் இடையிடையே சின்ன துரும்பாக முளைக்கும்  படிப்படியாக வளர்ந்து முதலாம் பாக முடிவிலே அவர்களோட இயல்பான வாழ்வியலை ஆலமர சைஸ்ல சொல்லியிருப்பார் ஆசிரியர். களவும் காவலும் ரெண்டு கண்ணு மாதிரி இதுல ஏதாவது ஒன்னு போய்ட்டா கூட இன்னொன்னை சம படுத்த முடியாது அந்த அளவுக்கு சமமா பேலன்ஸ் பண்றாங்க தாதனூர்காரங்க. ஒவ்வொரு கொத்தும் களவுக்கு போறப்ப எடுக்குற உப்பு மிளகாய்ல இருந்து திரும்பி வந்து கல்லை சடச்சிகிட்ட ஒப்படைக்குறது வரைக்கும் ஒரு திகிலான அனுபவம்தான். காவக்கம்பை எடுத்து மெல்ல எட்டு வச்சு ஊருக்குள்ள போயி ஒவ்வொரு தெருவுக்கும் ஒவ்வொரு காவக்காரன்கிட்டயும்  பொறுப்ப கொடுத்து  எவனாச்சு களவாண்ட வந்தா சண்டை செஞ்சு விடியக்காலை ஊருக்குள்ள திரும்புரது வரைக்கும் நிம்மதி இருக்காது காவக்காரங்களுக்கு....

யானை டாக்டர் - ஜெயமோகன் | yaanai doctor - Jeyamohan

                                                                          நூல் : யானை டாக்டர்                                                 ஆசிரியர் : ஜெயமோகன் பொதுவாவே இவரோட நாவல் எல்லாத்திலும் யானையோட பங்களிப்பு பெரிசா இருக்கும்.இந்த புக்குலயும் அதே மாதிரி யானையோட பங்களிப்பு இருந்தாலும் அதுக்கு சமமா அல்லது அதிகமா யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் யானையோட கொண்டிருக்கிற காதலை சொல்லியிருப்பார். புழுவ பாத்த சிலருக்கு ஓவ்வாமை அல்லது வாந்தி வரும் அதை அழகாக ஒரு குழந்தைக்கு இணையாக புரிய வைக்கிறார் டாக்டர் கே.காட்டில் எந்த விலங்கு இறந்தாலும் அதை போஸ்மாட்டம் பண்ணனும்னு தொடர்ந்து அரசாங்கத்தை வற்புத்திவருகிறார்.அதற்கான வழிமுறையும் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார்.அவரோட ஆதங்கம்...

ஆயிஷா - இரா . நடராஜன் | Ayisha - Era . Natarasan

                                                                    நூல் : ஆயிஷா                                                              ஆசிரியர் : நடராஜன்    நல்லா சூப்பரா போய்ட்டு இருக்குற படத்துல ஹீரோ தீடிர்னு  செத்துடார்னா பாக்குறவங்களுக்கு எப்டி இருக்கும் அதே மாதிரி தான் ஆயிஷாவும்( மனசு வலிக்குது 😢😢😢). பின்தங்கிய சமூகத்துல இருந்து பெண்களை பள்ளிகூடத்துக்கு அனுப்புறங்கிறது பெரிய விஷயம் அப்படி இருக்கையில் அந்த  பெண்ணும் நல்ல அறிவா இருந்தும் அந்த அறிவை சுத்தி இருக்குறவங்க யாருக்கும் அதை சரியா புரிச்சுக்க (பயன்படுத்த) தெரியாம அந்த பெண்ணை தட்டி கழிக்கிறார்கள். உதாரணத்து சொல்லாம்னா உலக உருண்டைனு கலிலியோ சொன்னப்ப கல்லாலே அடிச்சாங்க...

மீசை என்பது வெறும் மயிர் - ஆதவன் தீட்சண்யா | meesai enpathu verum mayir - Nandajothi Bhimdoss/Aadhavan Dheetchanya

                                            நூல் : மீசை என்பது வெறும் மயிர்                                               ஆசிரியர் : ஆதவன் தீட்சண்யா இந்த புத்தகத்தோட டைடில்லே படிக்கறவங்களை சுண்டி இழுக்கக் கூடியதாக இருக்கும். நந்தஜோதி அவர்களின் எல்லா புத்தகங்களும் இதே மாதிரி தலைப்பு கொண்டதாக இருக்கும் அதுக்கான காரணம் என்னானு புத்தகத்தை படிச்சா உங்களுக்கே தெரியும். ஒரு எழுத்தாளர்( ஆதவன்) இன்னொரு எழுத்தாளரை ( பீம்தாஸ் ) சந்திக்கிற ( நேர்க்காணல்) போது நடக்கின்ற உரையாடல்களை இங்கே பதிவு செய்திருக்கிறார் அதுமட்டுமில்லாம தனுஷ்கோடி கோரத்திலிருந்து உயிர் தப்பிய ஒருத்தரை பார்ப்பதும் ஆபூவர்ம்தானே ! எனக்கு இந்த புத்தகத்திலிருந்து என்னை கவர்ந்தது என்றால் இரண்டு புனைவுக்கதைகள். 1. ரவி தர்ம கீர்த் எழுதிய " சுத்த ரத்தத்தில் அழுகிய தொப்புள் கொடி " 2...

இந்தியாவில் சாதிகள் - டாக்டர் அம்பேத்கர் | Indiavil Sathigal - Dr. B R Ambedkar

நூல் : இந்தியாவில் சாதிகள்  ஆசிரியர் : டாக்டர் அம்பேத்கர் சாதி அமைப்பை பற்றிய முறையான அடிப்படை தெரிந்து கொள்வதற்கு நான் முன் வைக்கும் புத்தகம் அம்பேத்கரின் புத்தகம். ஏனெனில் அவர் அளவிற்கு சாதியை பற்றிய புரிதலுடன்  பாமர பகுத்தறிவற்ற மக்களை அதிலிருந்து மீட்க களத்தில் இறங்கி செயல்பட்டவர். எனக்கு சாதியை பற்றிய துளியளவு அறிவு கூட இல்லை ...இப்ப இருக்கானு கேட்டீங்கனா அதை பத்தி கொஞ்சமாச்சும் என்னால சொல்ல முடியும் .நாம எதுக்கு சாதிய அமைப்ப தெரிஞ்சுக்கனும்னா இப்ப இருக்குற தலைமுறையில சாதி வைச்சுகிட்டா வேலை எல்லாம் நடக்குதுனு கேட்டீங்கனா ஆமா தான் சொல்லனும். நாம வேணும்னா சாதிலாம் இல்லைனு சும்ம வேணா சொல்லலாம். சாதிங்கிறது  நம்மள சுத்தி மட்டும் அது இயங்குறது இல்ல நம்ம செய்யுற வேலையோட சேர்ந்ததுனு எனக்கு இப்பதான் தெரிஞ்சது . என்னைக்காவது யோசிச்சு இருக்கிங்களா குப்பை அள்ளுறவங்க , சாக்கடைய சுத்தம் செய்றவங்க, இது மாதிரி மற்ற வேலை செய்யுற எல்லோரும்  ஏன்  திரும்ப திரும்ப அவங்களே பரம்பரையா அதே வேலைய செய்றாங்க?.என்னைய யோசிக்க வைச்சது இந்த புத்தகம்.இவையெல்லாம் எங்...